Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
தமிழர் தேசிய முன்னணி என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் பழ.நெடுமாறன்.
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழர் தேசிய முன்னணிக் கட்சியை ஆரம்பித்து உள்ளதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார். மத்தியில் ஆட்சி மாறினாலும், தமிழர்கள் பிரச்சனை மட்டும் மாறவில்லை என்று கூறிய பழ.நெடுமாறன் கடந்த ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராகப் பின்பற்றப்பட கொள்கைகளே, இந்த ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலே நீல வண்ணமும், கீழே மஞ்சள் வண்ணமும் கொண்ட கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார் பழ.நெடுமாறன். கட்சியில் உள்ள நீல வண்ணம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களைக் குறிக்கிறது என்றும், மஞ்சள் என்பது தமிழர்களின் வீரம், பண்பாட்டையும் குறிக்கிறது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

0 comments: