Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
போலீஸ் விசாரணையில் ரவுடி சாவு: இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கொடுங்கையூர் தாமோதரன் நகரை சேர்ந்தவர் கோபால். பிரபல ரவுடியான இவன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்தன.
கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் கோபாலை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவனிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அங்கேயே திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபால் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கொடுங்கையூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இணை கமிஷனர் சண்முகவேல், புளியந்தோப்பு துணை கமிஷனர் சுதாகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

0 comments: