Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
கொடுங்கையூர் தாமோதரன் நகரை சேர்ந்தவர் கோபால். பிரபல ரவுடியான இவன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்தன.
கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் கோபாலை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவனிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அங்கேயே திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபால் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கொடுங்கையூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இணை கமிஷனர் சண்முகவேல், புளியந்தோப்பு துணை கமிஷனர் சுதாகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment