Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Theni
போடி அருகே, விவசாய நிலங்களில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி விவசாயம் குறித்த செயல்முறை விளக்கம் பெற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஹேமாவதி, இத்திஸ்ரீ, கலைவாணி, கலாமணி, கார்த்திகா, கார்த்திகேயணி, மீனா, மீனாபிரியா ஆகிய மாணவிகள் போடி அருகே கோடாங்கிபட்டியில் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் தென்னை மரத்திற்கு டானிக் பயன்படுத்தும் முறை, மண் மாதிரி எடுக்கும் முறை, விதை நேர்த்தி செய்யும் முறை அவற்றின் முக்கியத்துவம் பற்றி செயல்விளக்கம் பெற்றனர். மேலும் விவசாயிகளுக்கும் செய்து காட்டி விளக்கினர்.
இதேபோல் கனுப்புழு பாதிப்பைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துக்கூறினர். விவசாயிகள் விவசாயம் செய்யும் முறைகளையும் அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மாணவிகளுக்கு போடி வேளாண்மை உதவி அலுவலர் அப்புசாமி வழிகாட்டினார். கோடாங்கிபட்டி விவசாயிகள் பங்கேற்று மாணவிகளிடம் செயல்முறை விளக்கம் பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment