Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Sivaganga
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் காரைக்குடி டி.எஸ்.பி முருகேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமை வகித்தார். மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமியின் நிறுவனர் ஏ. நரசிம்மன் சாலை விபத்து நடப்பதற்கான காரணம், அதனை தவிர்ப்பது குறித்தும், தற்காப்புடன் வாகனங்களை செலுத்துவது குறித்தும் விடியோ படக்காட்சியுடன் மாணவிகளுக்கு விளக்கினார்.
காரைக்குடி போக்குவத்து காவல் ஆய்வாளர் பி. ரெத்தினம், சார்பு ஆய்வாளர் ஏ. வில்லியம் பெஞ்சமின், சாலைப் பாதுகாப்புப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணி மாறன் ஆகியோர் பேசினர்.
முடிவில் விபத்து என்னால் ஏற்படாது என்றும் எந்த விபத்திற்கும் நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
0 comments:
Post a Comment