Saturday, August 16, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவையின் சார்பில் 'மக்கள் முகாம்- பேரணி' நடந்தது. திருப்பூர் சந்தைப்பேட்டையில் துவங்கிய இந்த பேரணியில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு பேரணியாக வந்தனர். சந்தைப்பேட்டை, அங்கிருந்த மார்க்கெட், கடைகள் , பாதசாரிகளிடம், சாதனை விளக்க நோட்டீஸ்களை வழங்கினார்கள் சுமார் 2 கி., மீ. தூரம் பேரணியாக சென்று தட்டன்தோட்டம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு குட்டி தங்கவேல் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:
தமிழக முதல்வரின் 3 ஆண்டு கால சரித்திர சாதனை திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரில்கொண்டு சென்று அவரகளுக்கு விளக்கிடும் வகையில் தெருமுனை கூட்டங்கள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் அவர்களுக்கு விளக்கிடும் வகையிலும், மேலும் இது போன்ற கூட்டங்கள் நடத்துவது மூலம் மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு, கடந்த 3 ஆண்டுகலல் எத்தனை திட்டங்களை மக்களுக்கு அம்மா வழங்கினார் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டர்கள். தேர்தலில் மக்களிடம் கொடுத்த 54 வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சட்டமன்ற கூட் டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றி எதிர்கட்சி தலைவர்களும் பாராட்டும் வகையிலும்,இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சர்களும் செய்திராத சாதனைகள செய்து நல்லாட்சி நடத்தி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான்.
உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பாக்கெட்டில் ரூ.5 இருந்தால் போதும் அம்மா உணவகம் சென்று வயிறார இட்லி சாப்பிட்டு வரலாம்.ரூ.8 இருந்தால் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் சாப்பிட்டு வரலாம்.அதேபோல் ரூ.10 க்கு அம்மா குடிநீர் பாட்டில், அம்மா உப்பு என மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.20 சதவீதம் தள்ளுபடியில் அம்மா மருந்தகங்கள். தமிழக மக்களின் உரிமை மற்றும் ஜீவாதார பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் சென்று போராடி மீட்டுத்தந்துள்ளார்.மக்களின் குறைகளை போக்கும் வகையில் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவில் முதன்மை முதலமைச்சராக திகழ்கிறார்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த கூட்டத்தில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அணி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, ஸ்டீபன்ராஜ், சீனியம்மாள், கே.என்.சுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி கருணாகரன், வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி, தம்பி மனோகரன், கலைமகள் கோபால், பி.கே.முத்து கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், கீதா, நஜ்முதேன்,ராஜேஷ் கண்ணா,கோகுல், சடையப்பன், கண்ணபிரான், ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...











0 comments:
Post a Comment