Saturday, August 16, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், 4 பள்ளிகளை சேர்ந்த 2308 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, அய்யங்க்காளிபாளையம் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு, ரூ. 85.31 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க அயராது பாடுபட்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கல்விக்காக 17 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி சேர்ந்தது முதல் வரை அனைத்து உதவிகளையும் அம்மா செய்து வருகிறார்,
விலையில்லா நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், என 14 வகை பொருட்களை வழங்கி வருகிறார்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு விலையிலா சைக்கிள்கள், மடிக்கணினியும் வழங்கி தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அம்மா அளித்துள்ள வசதிகளை பயன் படுத்தி நீங்கள் நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம். சண்முகம்,துணை தலைவர் ஆனந்த குமார், ஒன்றிய தலைவர் சாமிநாதன்,மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான்,முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவ்வர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கே.என்.விஜயகுமார், கீதா, சுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...






0 comments:
Post a Comment