Saturday, August 16, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், 4 பள்ளிகளை சேர்ந்த 2308 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, அய்யங்க்காளிபாளையம் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு, ரூ. 85.31 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க அயராது பாடுபட்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கல்விக்காக 17 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி சேர்ந்தது முதல் வரை அனைத்து உதவிகளையும் அம்மா செய்து வருகிறார்,
விலையில்லா நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், என 14 வகை பொருட்களை வழங்கி வருகிறார்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு விலையிலா சைக்கிள்கள், மடிக்கணினியும் வழங்கி தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அம்மா அளித்துள்ள வசதிகளை பயன் படுத்தி நீங்கள் நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம். சண்முகம்,துணை தலைவர் ஆனந்த குமார், ஒன்றிய தலைவர் சாமிநாதன்,மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான்,முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவ்வர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கே.என்.விஜயகுமார், கீதா, சுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...






0 comments:
Post a Comment