Tuesday, August 12, 2014
சேடபட்டி பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படாததால், ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரையை அடுத்த சேடபட்டி ஒன்றியம் சங்கரலிங்காபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமமடைந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சிலநாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. ஆனால் அவற்றிலும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் கேட்டு மீண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று உசிலம்பட்டி, பேரையூர் மெயின் ரோட்டில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் சமரசம்
இதுபற்றி தகவலறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சேடபட்டி, பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, முரளிதரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சேடபட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார், உடனடியாக டிராக்டர் டேங்கர்களில் குடிநீர் விநியோகம் செய்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஊராட்சிமன்றத் தலைவருக்கு அறிவுறுத்தினார். ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...