Tuesday, August 12, 2014
அழகர்கோவில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர்
கோவில் கோட்டை வாசலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சந்தன
சாத்துப்படி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ? மாவட்ட காவல் துறையா ? எல்பின் ராஜாவா ? ... திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...