Tuesday, August 12, 2014
அழகர்கோவில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர்
கோவில் கோட்டை வாசலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சந்தன
சாத்துப்படி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...