Tuesday, August 12, 2014
அழகர்கோவில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர்
கோவில் கோட்டை வாசலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சந்தன
சாத்துப்படி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...