Wednesday, August 13, 2014
On Wednesday, August 13, 2014 by farook press in Break, திருப்பூர்
ஊத்துக்குளியில் கல்விக் கடன் தராமல் மாணவரை அலைக்கழிக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளியன்று ஊத்துக்குளி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் ஆர்.குமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி கடன் கேட்டு விஸ்வப்பிரியா என்ற மாணவி கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணப்பித்துள்ளார். இவருக்கு தகுந்த பதில் அளிக்காமல் பல மாத காலமாக அவ்வங்கி மேலாளர் அலைக்கழித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரிய பின்பு விஸ்வப்பிரியாவின் தாயாரை அழைத்து, முன்பே கடன் தர முடியாது என்று கூறிவிட்டதாக, ஒரு கடிதத்தை அவர் கையில் தந்து விட்டனர். இதனால் அம்மாணவியின் கல்விக்கு போதுமான பணம் இல்லாத காரணத்தால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி படிக்க வைக்கும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது.
வங்கி நிர்வாகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்தும், கல்வி கடன் கேட்டு வருபவருக்கு விண்ணப்பம் வழங்கும்ப்படியும், விஸ்வப்பிரியாவின் மனுவை பரிசீலித்து விரைவாக கல்வி கடன் வழங்குமாறும், அரசு பிறப்பித்துள்ள சட்டத்தின் அடிப்படையில் எந்த நிபந்தனையுமின்றி கல்வி கடன் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.மேகநாதன் உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன் சிறப்புறை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வங்கி தலைமை மேலாளர் நடேசன், இன்னும் பதினைந்து நாட்களுக்குள் மாணவி விஸ்வபிரியாவுக்கு கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
