Wednesday, August 13, 2014
இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலை கணிசமான அளவு உயரும் என தமிழ்நாடு மின்சார மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ள பொழுதில்தான் கோயிலின் காவல் தெய்வமான கருப்பசாமிக்கு மதுபானங்களை வைத்து வழிபட்டிருக்கிறார்கள் தேனி மக்கள்.
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுள்ள அருள்மிகு முத்து சோணை கருப்பண சாமிக்கோயிலில் தான் இந்த பூஜைகள் நடந்துள்ளது.
இதுபற்றி நம்மிடையே பேசிய கோவில் பூசாரி கோபிநாத், "ஒவ்வொரு வருசமும் ஆடி மாசம் நாளாவது திங்கட்கிழமை இந்த திருவிழா நடக்கும். பொதுவாக ஒவ்வொரு ஊருக்கும் அய்யனார், வீரபத்திரன்னு காவல் தெய்வங்கள் இருக்கும். சில கோயில்களிலும், இப்படியான காவல் தெய்வங்கள் உண்டு. அதே மாதிரி குச்சனூர் சனீஸ்வர பகவான் சன்னயிதில அவருக்கு காவல்தெய்வமா எங்க கருப்பண சாமி இருக்கிறார். இங்கு இருக்கிற காவல் தெய்வத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக நிலம், கிடா, சாராய பாட்டில் வச்சுத்தான் வழிபடுவாங்க.
குழந்தைப்பேறு இல்லாதவங்க, திருமணம் கைகூடாதவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், வேலை தேடுபவர்கள், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுன்னு பக்தர்களின் கஷ்டங்களை குறைய கருப்பணுக்கு வேண்டிய காணிக்கையை செலுத்துவாங்க. திங்கள் கிழமை காலையிலேயே வந்து பாட்டிகளை ஆபீஸ்ல கொடுத்துட்டு போயிடுவாங்க. நாங்க அதை வாங்கி அவுங்களோட பேரை எழுதி வச்சுடுவோம். மதியம் 12.30 க்கு பூஜை ஆரம்பமாகும். நாளு பூசாரிங்க மட்டும்தான் கருவறைக்குள்ள இருப்போம். கருப்பண் முன்னாடி இருக்குற கலயத்துல ஒவ்வொரு பாட்டிலா உடைச்சு உத்துவோம். கருப்பணே அதை குடிக்கிறதா ஒரு ஐதீகம்.
நேரம் ஆகஆக கருப்பணோட கண்ணு குடிகாரங்களுக்கு இருக்குறதுமாதிரி ஆக்ரோஷமா மாறும். இதை வச்சு கருப்பண் குடிச்சுருக்குறதா நாங்க வழிபடுவோம். இந்த பூஜை முடியுறதுக்கு எப்படியும் ராத்திரி ஒன்பது மணியாகிடும். அதுக்குள்ள பக்தர்கள் கொண்டுவந்த கிடா, கோழிகளை வெட்டி சமையல் பண்ணி முடிச்சுடுவாங்க. அந்த உணவை பக்தர்களுக்கு கொடுத்து வழிபடுவோம். ஒவ்வொரு வருசமும் வர காணிக்கையோட (பாட்டிகள்) எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே தான் போகுது. எனக்கு தெரிஞ்சு இந்த வழிபாடு ஆங்கிலேயர் காலத்துல இருந்தே இருக்கு" என்றார்.

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...