Wednesday, August 13, 2014
இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலை கணிசமான அளவு உயரும் என தமிழ்நாடு மின்சார மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ள பொழுதில்தான் கோயிலின் காவல் தெய்வமான கருப்பசாமிக்கு மதுபானங்களை வைத்து வழிபட்டிருக்கிறார்கள் தேனி மக்கள்.
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுள்ள அருள்மிகு முத்து சோணை கருப்பண சாமிக்கோயிலில் தான் இந்த பூஜைகள் நடந்துள்ளது.
இதுபற்றி நம்மிடையே பேசிய கோவில் பூசாரி கோபிநாத், "ஒவ்வொரு வருசமும் ஆடி மாசம் நாளாவது திங்கட்கிழமை இந்த திருவிழா நடக்கும். பொதுவாக ஒவ்வொரு ஊருக்கும் அய்யனார், வீரபத்திரன்னு காவல் தெய்வங்கள் இருக்கும். சில கோயில்களிலும், இப்படியான காவல் தெய்வங்கள் உண்டு. அதே மாதிரி குச்சனூர் சனீஸ்வர பகவான் சன்னயிதில அவருக்கு காவல்தெய்வமா எங்க கருப்பண சாமி இருக்கிறார். இங்கு இருக்கிற காவல் தெய்வத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக நிலம், கிடா, சாராய பாட்டில் வச்சுத்தான் வழிபடுவாங்க.
குழந்தைப்பேறு இல்லாதவங்க, திருமணம் கைகூடாதவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், வேலை தேடுபவர்கள், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுன்னு பக்தர்களின் கஷ்டங்களை குறைய கருப்பணுக்கு வேண்டிய காணிக்கையை செலுத்துவாங்க. திங்கள் கிழமை காலையிலேயே வந்து பாட்டிகளை ஆபீஸ்ல கொடுத்துட்டு போயிடுவாங்க. நாங்க அதை வாங்கி அவுங்களோட பேரை எழுதி வச்சுடுவோம். மதியம் 12.30 க்கு பூஜை ஆரம்பமாகும். நாளு பூசாரிங்க மட்டும்தான் கருவறைக்குள்ள இருப்போம். கருப்பண் முன்னாடி இருக்குற கலயத்துல ஒவ்வொரு பாட்டிலா உடைச்சு உத்துவோம். கருப்பணே அதை குடிக்கிறதா ஒரு ஐதீகம்.
நேரம் ஆகஆக கருப்பணோட கண்ணு குடிகாரங்களுக்கு இருக்குறதுமாதிரி ஆக்ரோஷமா மாறும். இதை வச்சு கருப்பண் குடிச்சுருக்குறதா நாங்க வழிபடுவோம். இந்த பூஜை முடியுறதுக்கு எப்படியும் ராத்திரி ஒன்பது மணியாகிடும். அதுக்குள்ள பக்தர்கள் கொண்டுவந்த கிடா, கோழிகளை வெட்டி சமையல் பண்ணி முடிச்சுடுவாங்க. அந்த உணவை பக்தர்களுக்கு கொடுத்து வழிபடுவோம். ஒவ்வொரு வருசமும் வர காணிக்கையோட (பாட்டிகள்) எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே தான் போகுது. எனக்கு தெரிஞ்சு இந்த வழிபாடு ஆங்கிலேயர் காலத்துல இருந்தே இருக்கு" என்றார்.

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...