Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
யாவரும் நலம் படத்துக்குப் பிறகு தெலுங்குக்கு சென்ற விக்ரம் குமார் அங்கு சில படங்களை இயக்கினார். அனைத்தும் ஹிட். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு மனம் படம் அனைவராலும் பாராட்டப்பட்டதுடன் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. 2டி என்டர்டெய்ன்மெண்டின் இரண்டாவது தயாரிப்பு இது. பாண்டிராஜ் இயக்கும் குழந்தைகள் சம்பந்தமான படத்தை சூர்யா ஏற்கனவே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.