Tuesday, August 12, 2014

மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி தேருக்கு வண்ண வண்ண மலர்களாலும், வண்ண வண்ண துணிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 4 மணியளவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேருக்கு எழுந்தருளினார். தேரில் சிறப்பு பூஜைகள் தீபாராதணைகள் நடைபெற்றன.காலை 8.45 மணிக்கு அழகர்கோவில் தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம், துணை ஆணையர் வரதராஜன், இளைய ஜமீன்தார் ,பி ஆர் ஓ சிவராஜன் ஆகியோர் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர். அதை தொடாந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது “கோவிந்தா கோவிந்தா” என்று பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி இழுத்துச்சென்றனர். ஏராளமான பக்தர்கள் தீப்பந்தங்களை ஏந்தி அழகரை பற்றி புகழ் பாடி தேருக்கு முன் சென்றனர்.தேர் ஓடும் வீதி முழுவதும் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்ததால் தேர் கோட்டை வாசல் உள் பிரகாரம் வழியாக வலம் வந்து 11 மணியளவில் தேர் நிலையை வந்து அடைந்தது. அதன் பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதணையும் நடைபெற்றது. தேரோட்டததை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அழகர் கோவில் பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.மதுரை கள்ளழகர் கோவில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இந்த தலமானது ஆழ்வார்களால் பாடப்பெற்ற புகழ் வாய்ந்த கோவிலாகும்.இயற்கை எழில் சூழ்ந்த அழகர் மலை அடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்றாலும் ஆடிப்பெருந்திருவிழா என்பது சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இத்திருவிழாவின் சிகரமாக தேர் திருவிழா நடக்கிறது.இத்தகைய பிரசித்தி பெற்ற ஆடிப்பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு மாவிலை, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜபெருமாள் கொடிமரம் அருகே சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி மேளதாளத்துடன் கொடி ஏற்றப்பட்டது. அன்றிலிருந்து தினசரி சுந்தரராஜ பெருமாள் அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமார்வாகனம், கருடவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவந்தார் அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் காலை நடைபெற்றது. தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டும் அல்லது பிற மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கார்களிலும், மோட்டடார் சைக்கிள்களிலும் அழகர் கோவிலை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். கிராம பகுதி மக்கள் மாட்டு வண்டிகளிலும் அழகர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கு வசதிகளாக இரவு முழுவதும் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...