Tuesday, August 12, 2014
ஆப்பிரிக்க நாட்டில் தற்போது புதுவகை நோயான ‘எபோலா’ என்ற கொடிய நோய் பரவி வருகிறது. இந்நோயால் பலர் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். ‘எபோலா’ நோய்க்கு பயந்து நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் மூலம் நம் நாட்டிலும் நோய் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய–மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்திலும் ‘எபோலா’ வைரஸ் நோய் பாதிப்பை கண்டறியும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் பயணிகள் அனைவரையும் இச்சோதனை குழு பரிசோதனை செய்து வருகிறது.
இக்குழுவில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர், சுகாதார ஆய்வாளர் உள்ளனர். இக்குழு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘எபோலா’ நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 4 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை துபாயில் இருந்து மதுரை வந்த ஜெட் விமானத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் இருந்து 3 பேர் வந்ததாக டாக்டர் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் பற்றி விசாரணை நடத்தியதில் டவ்லோ டிவைன் அமி (வயது45) என்பவர் தனது மகள்கள் டிபென்ட்ரி ஐராம் போபி (6), அன்ட்ரி எமிபா அப்லா (3) ஆகியோருடன் மதுரை வந்தது தெரியவந்தது.
டவ்லோ டிவைன் அமி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள பள்ளியில் படித்து வந்ததால் அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மகள்களுடன் வந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அவர்கள் 3 பேரையும் பரிசோதனை செய்து பார்த்தனர். அவர்களுக்கு ‘எபோலா’ வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்ததும் கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...