Monday, August 25, 2014
மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க புதிய பேராயர் பணி ஏற்பு விழா நேற்று தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த விழாவில், 6–வது பேராயராக அந்தோணி பாப்புசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வத்தோரே பென்னாக்கியா தலைமை தாங்கி புதிய பேராயரிடம் பொறுப்புகளை வழங்கினார். மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ முன்னிலை வகித்தார். எஸ்.சி., எஸ்.டி., பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை செபாஸ்டின் வரவேற்றார்.
முதன்மை குழு ஜோசப் செல்வராஜ், துறவிகள் ஜோஸ்பின் நிர்மலாமேரி, பொதுநிலையினர் சார்பில் ஏ.எம்.ஜேம்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, கோட்டாறு ஆகிய 7 மறை மாவட்டங்களுக்கு இவர் பேராயராக பதவி வகிப்பார்.
விழாவில் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்பட 20–க்கும் மேற்பட்ட ஆயர்களும், 400–க்கும் மேற்பட்ட குருக்கள், 600–க்கும் மேற்பட்ட இருபால் துறவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மதுரை வடக்கு வட்டார அதிபர் அந்தோணி ராஜன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும் நோபிலி அருட்பணி மைய இயக்குநருமான அருட்தந்தை ஜான்பிரிட்டோ பாக்கியராஜ், மறைமாவட்ட பொருளாளர் ஆரோக்கியம், கல்விப்பணிக்குழு செயலர் எட்வர்டு பிரான்சிஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment