Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். | கோப்புப் படம்
இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆண்டர்சன் தொடர்ந்து வசையில் ஈடுபட வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.
"4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் சிக்கி அவர் பலவீனமடைந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனை நோக்கிக் கூறிய வசை வார்த்தை அல்லது ஆண்டர்சன் தோனியை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது நடுவர் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டும்.
இது போன்ற கெட்ட வார்த்தைகள் விவகாரத்தில் தன் பெயர் இழுக்கப்படுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் விரும்ப மாட்டார். அவருக்கு இளம் வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வார்த்தைகளை தம் தந்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவது நல்லதல்ல.
ஷிகர் தவன், தோனி ஆகியோர் ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் திக்கித் திணறிவருகின்றனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதில்லை.
ஆண்டர்சனை விளையாடும் போது தோனி அங்கும் இங்குமாக அலைந்து திக்கி திணறுகிறார். அதனை நினைவுபடுத்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆண்டர்சன் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்யலாம்” என்கிறார் மைக்கேல் வான்.
கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.
"4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் சிக்கி அவர் பலவீனமடைந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனை நோக்கிக் கூறிய வசை வார்த்தை அல்லது ஆண்டர்சன் தோனியை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது நடுவர் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டும்.
இது போன்ற கெட்ட வார்த்தைகள் விவகாரத்தில் தன் பெயர் இழுக்கப்படுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் விரும்ப மாட்டார். அவருக்கு இளம் வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வார்த்தைகளை தம் தந்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவது நல்லதல்ல.
ஷிகர் தவன், தோனி ஆகியோர் ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் திக்கித் திணறிவருகின்றனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதில்லை.
ஆண்டர்சனை விளையாடும் போது தோனி அங்கும் இங்குமாக அலைந்து திக்கி திணறுகிறார். அதனை நினைவுபடுத்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆண்டர்சன் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்யலாம்” என்கிறார் மைக்கேல் வான்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...