Thursday, August 14, 2014
இந்தியாவின் 68–வது சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 9 மணிக்கு தேசியக்கொடி யேற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து சுதந்திரதின உரையாற்றும் அவர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை வழங்குகிறார். சுதந்திரதின விழாவையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக் கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றுகிறார்.
போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர் சுதந்திர போராட்ட தியாகிக ளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களை அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொள்ளும் கலைநிகழச்சிகள் நடைபெறுகிறது.
சுதந்திரதின விழாவையொட்டி கோவை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வாகனங்களில் பயணம் செய்வோரின் விவரங்களை முழுமையாக அறிந்த பின்னரே அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதேபோல் அனைத்து லாட்ஜூகளிலும் சோதனை நடைபெறுகிறது. மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நாளை காலை 8 மணிக்கு சுதந்திரதினவிழா நடைபெறுகிறது. கலெக் டர் கோவிந்தராஜ் தேசியக் கொடியேற்றி போலீசார் மற்றும் என்.சி.சி., ஊர்க் காவல் படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
அதன் பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுர விக்கும் அவர் ஏழை–எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்குகிறார். மாவட்டம் முழுவதும் இருந்து கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. சுதந்திரதின விழாவை யொட்டி திருப்பூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மேயர் விசாலாட்சி கலந்து கொண்டு தேசியக் கொடியேற்று கிறார்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு சுதந்திரதினவிழா நடைபெறுகிறது. கலெக்டர் சங்கர் தேசியக்கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் சமீப காலமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் உள்ளதாக போலீசுக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் சுதந்திர தினத்தன்று நீலகிரி–கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையங்களை நக்சலைட்டுகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. அதன் பேரில் அந்த காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி–கேரள–கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment