Thursday, August 14, 2014
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:–
வெள்ளலூர் குளத்தில் வண்டல் மண், கிராவல் மண் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கீழ் 15 அடி வரை தோண்டி கிராவல் மண் கடத்தி வருகிறார்கள்.
குளம் சீரமைப்பு என்ற பெயரில் மண் கடத்தல் நடக்கிறது. இந்த குளத்தில் மண் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மண் எடுக்க தனியாருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. சூலூர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘செம்மாண்டம்பாளையம் குளம், வண்ணத்தாங்கரை ஓடை மூலமாக கிடைக்கும் நீரில் சூலூர் சுற்றுப்பகுதியில் விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த நீராதாரங்கள் உதவியாக இருக்கிறது.
இந்த குளத்தை விவசாயி கள் தூர் வாரி சீரமைக்க வண்டல் மண்ணை விவசாய பணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோவை மினி லாரி ஆபரேட்டர் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், ‘‘வெள்ளலூரில் லாரிப் பேட்டை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கே மினி லாரிகள் நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment