Saturday, September 20, 2014
ஊத்துக்குளி தாலுகாவில் சாயகழிவு நீரால் தரிசான 10 ஏக்கர் நிலத்தை சீரமைத்து அதில் தென்னை நாற்றுகளை வேளாண்மைத்துறையினர் நடவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
சாயகழிவு நீரால் பாதிப்புதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் நொய்யல் ஆறு பாசனம் பெறும் பகுதிகள் சாயகழிவு நீரால் மாசுபட்டன. இதில் ஒரு சில பகுதிகளில் பட்டா நிலங்களே மாசுபட்டு பயிர் சாகுபடி இல்லாமல் உள்ளன. இதை மேம்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நிலங்களை சீர்திருத்தி விவசாய பணிக்கு கொண்டுவர திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் கிராமம் செம்பாவள்ளம் பகுதியில் தரிசாக கிடக்கும், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சீரமைக்க வேளாண்மை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தில் இருந்த முள் புதர்கள் அகற்றப்பட்டு 10 ஏக்கரிலும் குழிகள் எடுத்து தென்னை நடவுக்கு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்னை நடவுஇந்தநிலையில் அந்த நிலத்தில் தென்னை நாற்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தென்னை நடவுக்கு தேவையான 800 நெட்டை தென்னங்கன்றுகள் பவானிசாகர் தென்னை நாற்று பண்ணையில் இருந்து வேளாண்மை துறை மூலம் எடுத்துவரப்பட்டு உரங்களும் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணைஇயக்குனர் சந்தானகிருஷ்ணன் தென்னை நாற்றுகளை நட்டு நடவு பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது, சாயகழிவு கலந்த நொய்யல் நதிநீர் பாதிப்பினால் தரிசாக கிடக்கும் நிலங்களை சீர்திருத்தம் செய்து தென்னை, ராகி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிடும் படி பிற விவசாயிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். தென்னை நடவுக்கான ஏற்பாடுகளை ஊத்துக்குளி உதவி வேளாண்மை இயக்குனர் அரசப்பன், வேளாண்மை அலுவலர் செல்லம்மாள், அட்மாதிட்ட மேலாளர் ராதிகா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பெஞ்சமின்,முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
சாயகழிவு நீரால் பாதிப்புதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் நொய்யல் ஆறு பாசனம் பெறும் பகுதிகள் சாயகழிவு நீரால் மாசுபட்டன. இதில் ஒரு சில பகுதிகளில் பட்டா நிலங்களே மாசுபட்டு பயிர் சாகுபடி இல்லாமல் உள்ளன. இதை மேம்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நிலங்களை சீர்திருத்தி விவசாய பணிக்கு கொண்டுவர திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் கிராமம் செம்பாவள்ளம் பகுதியில் தரிசாக கிடக்கும், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சீரமைக்க வேளாண்மை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தில் இருந்த முள் புதர்கள் அகற்றப்பட்டு 10 ஏக்கரிலும் குழிகள் எடுத்து தென்னை நடவுக்கு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்னை நடவுஇந்தநிலையில் அந்த நிலத்தில் தென்னை நாற்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தென்னை நடவுக்கு தேவையான 800 நெட்டை தென்னங்கன்றுகள் பவானிசாகர் தென்னை நாற்று பண்ணையில் இருந்து வேளாண்மை துறை மூலம் எடுத்துவரப்பட்டு உரங்களும் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணைஇயக்குனர் சந்தானகிருஷ்ணன் தென்னை நாற்றுகளை நட்டு நடவு பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது, சாயகழிவு கலந்த நொய்யல் நதிநீர் பாதிப்பினால் தரிசாக கிடக்கும் நிலங்களை சீர்திருத்தம் செய்து தென்னை, ராகி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிடும் படி பிற விவசாயிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். தென்னை நடவுக்கான ஏற்பாடுகளை ஊத்துக்குளி உதவி வேளாண்மை இயக்குனர் அரசப்பன், வேளாண்மை அலுவலர் செல்லம்மாள், அட்மாதிட்ட மேலாளர் ராதிகா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பெஞ்சமின்,முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment