Thursday, September 04, 2014
சென்னை தேனாம்பேட்டையில் ஓட்டலின் 10-வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள சென்னிமலைபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 23). இவர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பிரபல கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
பரமேஸ்வரன் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறையை முடித்துவிட்டு பெங்களூருக்கு பணி மாறுதல் கிடைத்துவிட்டதாக தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் பெற்றோரிடம் கூறியபடி பெங்களூருக்கு செல்லவில்லை. மாறாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த பரமேஸ்வரன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
அங்கு தங்கியிருந்தபடி அண்ணா சாலையில் உள்ள 10 மாடி கொண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு நேரங்களில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் அந்த ஓட்டலின் 10-வது மாடியில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தினார்.
நள்ளிரவு 12 மணி நேரம் ஆகியதால் பார் ஊழியர் ‘பார் மூடுவதற்கான நேரம் ஆகிவிட்டது’ என்று கூறியுள்ளார். அடுத்த சில நொடிகளில் வேகமாக வெளியே சென்ற பரமேஸ்வரன் மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தார்.
இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஓட்டல் ஊழியர்கள் உடனே தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார் பரமேஸ்வரனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரமேஸ்வரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவர் சட்டை பையில் இருந்து போலீசார் எடுத்தனர். அதில் ‘நான் தற்கொலை செய்துகொள்வதற்கு யாரும் காரணம் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் பரமேஸ்வரன் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயப்பேட்டையில் இருந்து ஆம்புலன்சில் அவர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
பரமேஸ்வரன் தற்கொலை செய்துகொள்வதற்கு பணிபுரியும் நிறுவனத்தில் வேலைப்பளு காரணமா? அல்லது காதல் விவகாரமா? என்றும் பெங்களூருக்கு பணி மாறுதல் கிடைக்காமலேயே அவர் தனது உறவினர்களிடம் பணி மாறுதல் கிடைத்ததாக கூறிவிட்டு சென்னைக்கு வர காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள சென்னிமலைபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 23). இவர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பிரபல கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
பரமேஸ்வரன் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறையை முடித்துவிட்டு பெங்களூருக்கு பணி மாறுதல் கிடைத்துவிட்டதாக தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் பெற்றோரிடம் கூறியபடி பெங்களூருக்கு செல்லவில்லை. மாறாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த பரமேஸ்வரன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
அங்கு தங்கியிருந்தபடி அண்ணா சாலையில் உள்ள 10 மாடி கொண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு நேரங்களில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் அந்த ஓட்டலின் 10-வது மாடியில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தினார்.
நள்ளிரவு 12 மணி நேரம் ஆகியதால் பார் ஊழியர் ‘பார் மூடுவதற்கான நேரம் ஆகிவிட்டது’ என்று கூறியுள்ளார். அடுத்த சில நொடிகளில் வேகமாக வெளியே சென்ற பரமேஸ்வரன் மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தார்.
இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஓட்டல் ஊழியர்கள் உடனே தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார் பரமேஸ்வரனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரமேஸ்வரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவர் சட்டை பையில் இருந்து போலீசார் எடுத்தனர். அதில் ‘நான் தற்கொலை செய்துகொள்வதற்கு யாரும் காரணம் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் பரமேஸ்வரன் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயப்பேட்டையில் இருந்து ஆம்புலன்சில் அவர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
பரமேஸ்வரன் தற்கொலை செய்துகொள்வதற்கு பணிபுரியும் நிறுவனத்தில் வேலைப்பளு காரணமா? அல்லது காதல் விவகாரமா? என்றும் பெங்களூருக்கு பணி மாறுதல் கிடைக்காமலேயே அவர் தனது உறவினர்களிடம் பணி மாறுதல் கிடைத்ததாக கூறிவிட்டு சென்னைக்கு வர காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment