Saturday, September 13, 2014
சென்னை, செப். 13–
பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்த நாள் விழாவையொட்டி பூந்தமல்லியில் 15–ந்தேதி ம.தி.மு.க. மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டை திறந்தவெளி மாநாடாக நடத்துகின்றனர்.
15–ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக நெல்லை அபுபக்கர், ஓரத்தநாடு கோடி கணேஷ், சென்னை மணிமாறன் ஆகிய குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் தலைமை தாங்குகிறார். பூவை மு.பாபு வரவேற்கிறார். மாவட்ட செயலாளர்கள் பாலவாக்கம் சோமு, ஜீவன், வேளச்சேரி மணிமாறன், வேலூர் சுப்பிரமணி, உதயகுமார், பன்னீர், ராஜா, ஏ.கே.மணி, நடராஜன், சம்பத் மாதையன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் மாநாட்டு முகப்பை திறந்து வைக்கிறார்.
தேர்தல் பணி துணை செயலாளர் டி.சி. ராஜேந்திரன் ம.தி.மு.க. கொடி ஏற்கிறார். வக்கீல் அருணாசலம் அண்ணா, சுடர் ஏற்றுகிறார்.
மாநாட்டில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
இதில் அவைத் தலைவர் துரைசாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரைபாலகிருஷ்ணன் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி செந்தில் அதிபன், இமயம், ஜெபராஜ், வக்கீல் தேவதாஸ், அழகு சுந்தரம், குமரி விஜயகுமார், கவிஞர் தமிழ்மறவன், கோமுகன், வந்திய தேவன், வக்கீல் நன்மாறன் உள்பட பலர் பேசுகின்றனர். ஆவடி அந்தரிதாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். முடிவில் தணிகாசலம் நன்றி கூறுகிறார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் அடுத்த சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க.வின் நிலை என்ன என்பதை வைகோ விளக்கமாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் இருந்து மாநாடு நடைபெறும் பூந்தமல்லி வரை வழி நெடுக வரவேற்பு பதாகைகள், அலங்கார வளையங்கள், கொடி தோரணங்கள் அமைக்கப்படுகின்றன.
அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவரது வாசகங்கள் அடங்கிய வரவேற்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment