Saturday, September 13, 2014
கோவை, செப்.13–
கோவை சவுரி பாளையம் அருகேயுள்ள உடையாம்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் சவுரிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கரத்தினம் காம்ப்ளக்சில் ஸ்ரீ ஹரி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக தங்க, வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சங்கரின் நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பதாக சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே சங்கர் நகை கடைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மறு நிமிடமே பீளமேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் காம்ப்ளக்சிற்குள் புகுந்து முதல் மாடியில் உள்ள சங்கரின் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு கடைக்கு முன்பு உள்ள கிரில் கம்பியில் வெளியில் இருந்து பார்த்தால் மாடியில் என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் கருப்பு நிற அட்டை பொருத்தியுள்ளனர். பின்னர் வெல்டிங் மிஷின் எந்திரத்தின் உதவியுடன் நகைக்கடையின் ஷட்டரை ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டி எடுத்துள்ளனர்.
அதன்வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஷோகேசில் இருந்த 1¼ கிலோ தங்க நகைளை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். ஆனால் கடையில் இருந்த வெள்ளி நகைகளை அவர்கள் தொடவில்லை.
அவை அப்படியே ஷோகேசில் இருந்தன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
அது கொள்ளை நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்து கொண்டது. நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment