Saturday, September 13, 2014
அவினாசி காமராஜர் நகர் குடியிருப்பு நல சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் வேலுமணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குமாரராஜா, செயலாளர் துரைசாமி, துணைச் செயலாளர் நடராஜ், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காமராஜ் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் ஒவ்வொரு வீட்டின் முன்புறமும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கட்டித் தரவேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாட உபகரணங்கள் தரவேண்டும்.
பூங்காவின் வடபகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாடுகின்றன. இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். பூங்காவில் நடைபயிற்சி செய்ய அக்குபஞ்சர் கல் பதிக்க வேண்டும்.
பூங்காவின் சுற்றுப் புறத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் கீழே இறங்கிவிட்டதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே வர ஏதுவாக உள்ளது. எனவே கம்பி வேலியை சரி செய்ய வேண்டும்.
இப்பகுதியில் பாலித்தீன் பைகள், காகித குப்பைகள் நிறைந்துள்ளது. எனவே வீதி கூட்டுபவர்கள் அன்றாடம் இங்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment