Wednesday, September 03, 2014
திருப்பூர் அருகே பஸ்–வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 6 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேர் நேற்று காலை பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் பல்லடம் திரும்பிக் கொண்டு இருந்தனர். மங்கலத்தை அடுத்த ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே இரவு 10 மணி அளவில் பஸ் வந்தபோது எதிரே சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பிரபு(வயது 30) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவரான கவுந்தபாடியைச் சேர்ந்த தவசி(32) உடல் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தவசி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த பனியன் நிறுவன ஊழியர்களான சரத், சிவா, பாண்டுரங்கன், கார்த்திக், தங்கவேலு, ரேணுகா, செல்வி, சுமித்தா, அனிதா மற்றும் பஸ்சின் மற்றொரு டிரைவர் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த பனியன் தொழிலாளர்களான ரமேஷ், விஜயலட்சுமி, நித்யா ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை பல்லடம் தீயணைப்பு வீரர்கள், மங்கலம் போலீசார் போராடி மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லடம்–மங்கலம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment