Wednesday, September 03, 2014
திருப்பூர் அருகே பஸ்–வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 6 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேர் நேற்று காலை பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் பல்லடம் திரும்பிக் கொண்டு இருந்தனர். மங்கலத்தை அடுத்த ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே இரவு 10 மணி அளவில் பஸ் வந்தபோது எதிரே சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பிரபு(வயது 30) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவரான கவுந்தபாடியைச் சேர்ந்த தவசி(32) உடல் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தவசி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த பனியன் நிறுவன ஊழியர்களான சரத், சிவா, பாண்டுரங்கன், கார்த்திக், தங்கவேலு, ரேணுகா, செல்வி, சுமித்தா, அனிதா மற்றும் பஸ்சின் மற்றொரு டிரைவர் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த பனியன் தொழிலாளர்களான ரமேஷ், விஜயலட்சுமி, நித்யா ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை பல்லடம் தீயணைப்பு வீரர்கள், மங்கலம் போலீசார் போராடி மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லடம்–மங்கலம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment