Wednesday, September 03, 2014
திருப்பூர் அருகே பஸ்–வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 6 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேர் நேற்று காலை பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் பல்லடம் திரும்பிக் கொண்டு இருந்தனர். மங்கலத்தை அடுத்த ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே இரவு 10 மணி அளவில் பஸ் வந்தபோது எதிரே சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பிரபு(வயது 30) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவரான கவுந்தபாடியைச் சேர்ந்த தவசி(32) உடல் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தவசி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த பனியன் நிறுவன ஊழியர்களான சரத், சிவா, பாண்டுரங்கன், கார்த்திக், தங்கவேலு, ரேணுகா, செல்வி, சுமித்தா, அனிதா மற்றும் பஸ்சின் மற்றொரு டிரைவர் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த பனியன் தொழிலாளர்களான ரமேஷ், விஜயலட்சுமி, நித்யா ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை பல்லடம் தீயணைப்பு வீரர்கள், மங்கலம் போலீசார் போராடி மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லடம்–மங்கலம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment