Tuesday, September 09, 2014
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி சரகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.ஐ. க்கள் மற்றும் போலீசார் உட்பட 29ம் பேர் திடீர் என வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி சரகத்தில், தாலுகா, மேற்கு, கிழக்கு, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், மகாலிங்கபுரம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 180க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், இச்சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய போலீசாரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி உயர் அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், இடமாறுதல் தொடர்பான உத்தரவை மாவட்ட எஸ்பி.,சுதாகர் வெளியிட்டுள்ளார். அதில் பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ., எஸ்எஸ்ஐ., தலைமை காவலர் மற்றும் தனிப்பிரிவு போலீசார் என மொத்தம் 29 பேர் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், பேரூர் மற்றும் கருமத்தம்பட்டி சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால். பொள்ளாச்சி சரக ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment