Tuesday, September 09, 2014
உடுமலை, : கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி 2ம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது, பருவமழை பொழிந்து அணைகள் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் முடிந்தது. இதை தொடர்ந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 60 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று காலை 9 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணை மதகுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், பொள்ளாச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், செல்லமுத்து, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment