Tuesday, September 09, 2014
ஈரோடு, : ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (கன்ட்ரோல் ரூம்) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை என்றும், பல அழைப்புகளை அங்கு பணியாற்றும் மைக் ஆப்ரேட்டர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....

0 comments:
Post a Comment