Sunday, September 07, 2014
நாமக்கல்லை சேர்ந்தவர் துரை(வயது 32). இவர் திருப்பூர் சந்திராபுரம் மர்சியம்மாள் நகர் 2–வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் லாரி ஒர்க்ஷாப் வைத்துள்ளார். சம்பவத்தன்று துரை தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மறுநாள் காலை துரையின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துரைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக துரை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து துரை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தலைமை ஏட்டு விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி திருக்கன்குறிச்சியைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் அருண்குமார்(23), சேலம் ராமரெட்டிபட்டியைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கார்த்திக்(18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment