Sunday, September 07, 2014
திருப்பூரில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகளை சிலர் வெட்டி அகற்றினார்கள். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி 500 கிலோ மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 49–வது வார்டுக்கு உட்பட்ட கருவம்பாளையம், வெடத்தலங்காடு 4–வது வீதியில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையோரம் உள்ளன. இந்த பகுதியில் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் மோதி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், நேற்று காலை சாலையோரம் இருந்த 10–க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியவர்களை எச்சரிக்கை செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பொது இடத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சுமார் 500 கிலோ எடையுள்ள அந்த மரக்கட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேனில் ஏற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
பொதுஇடங்களில் இருந்த மரக்கிளையை வருவாய்த்துறைக்கு தெரியாமல் வெட்டிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், திருப்பூர் சப்–கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் அந்த பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment