Saturday, September 13, 2014
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் 3 ஆம் வகுப்பு படிக்கும்
மாணவரை தீவைத்துக் கொலை செய்ததாக அவரது சித்தியை காவல்துறையினர்
வெள்ளிக்கிழமை(12.09.2014) கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் அருகில் கீரனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி.
கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் காமேஸ்வரன்(8). இங்குள்ள இந்து துவக்கப்
பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் 1.45க்கு காமேஸ்வரன்
பள்ளி விட்டு திரும்பியபோது அவரது தாய் டெய்சிராணியின் சகோதரி பேச்சி
அம்மாள்(30) காமேஸ்வரனை பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்று அவரது கையை
கட்டி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்திருக்கிறார்.
பலத்த தீக்காயமடைந்த சிறுவனின் அலறல் கேட்டு காமேஸ்வரனை மீட்டு
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு மாலை
5.30க்கு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
சிறுவன் அருகிலுள்ள கோவிலில் சர்க்கரை பொங்கல் வாங்கி வந்ததாகவும் அதனை
அவரது வடக்கு தெருவிலுள்ள ஆச்சிக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பேச்சி
அம்மாள் தனக்கும் வாங்கி வரக்கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு காமேஸ்வரன்
மறுத்ததால் மன நலம் பாதிக்கப்பட்ட பேச்சி அம்மான் கையை கட்டி தீவைத்து
விட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
ராமையா நாடார் மகளான பேச்சி அம்மாளுக்கு திருமணமாகவில்லை. ஆத்தூர்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து
வருகின்றனர். இச்சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment