Saturday, September 13, 2014
நெல்லை,செப்.13–
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு சாட்டுப்பத்து வழியாக பாபநாசம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதனால் மேலும் பயணிகள் பீதியடைந்தனர். எனினும் அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி பஸ்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
டிரைவரின் இந்த நடவடிக்கையால் பஸ்சில் இருந்த 50–க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறுகையில், சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்தால் எங்காவது பழுதாகி நின்று விடுகிறது. இதுபோன்று டயர்கள் வெடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே தினமும் பஸ்கள் புறப்படும் முன்பு அதில் உள்ள பழுதுகளை நீக்கி விபத்தில்லாமல் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment