Saturday, September 13, 2014
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு காந்திய மக்கள் இயக்க வேட்பாளராக டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளை போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒரு மாநகராட்சி மேயர் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு ஆட்சிப்பொறுப்பில் உள்ள 15–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இங்கு வந்து முற்றுகையிட்டு இருப்பதும், முதல்–அமைச்சரே இங்கு வந்து பிரசாரம் செய்ய உள்ளதும் எந்த வகையிலும் ஆரோக்கியமான அரசியல் அல்ல.
இத்தகையை சூழலில் நாங்கள் எளிமையாய், சத்தியம் சார்ந்து இந்த தேர்தலில் சரித்திரம் படைப்போம். எங்கள் இயக்க வேட்பாளர் வெற்றி பெற்றால் கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் துறையை விட சிறந்து விளங்கிடவும், சிறப்பான சேவை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பார். ஊழலில் நிழல்படாத, அற்புதமாக நிர்வாகத்தை தருவதற்கு எங்கள் வேட்பாளர் இருப்பார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி அ.தி.மு.க.வை எதிர்ப்பதற்காக பா.ஜனதாவுக்கு திருப்ப கூடும். ஆனால் எல்லா கட்சிகளிலும் நேர்மையான பொது அரசியல் இருக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் இயக்க வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.
ஸ்தாபன காங்கிரசில் இருந்து வந்தவர்கள் அத்தனை பேரும் எங்கள் இயக்கத்துக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் 80 சதவீத காங்கிரஸ் தொண்டர்கள் ஜி.கே.வாசனுடன் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கொடுப்பதில்லை. காமராஜரின் பெயரைச் சொல்வதற்கு அவர் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவர் போன்றவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை.
ஆகவே காங்கிரசை விட்டு விரைவாக அவர் வெளியே வரவேண்டும். வெளியே வந்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்போடு கைகொடுக்க காந்திய மக்கள் இயக்கம் தயாராக உள்ளது.
இதன் மூலம் 2016–ல் ஒரு மாற்று அரசியல் அணியை உருவாக்க முடியும். குறிப்பாக அவர் உருவாக்கும் அமைப்பு, எங்களது இயக்கம் மற்றும் ம.தி.மு.க, இடதுசாரிகளை வைத்து ஒரு மாற்று அணியை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment