Wednesday, September 17, 2014
4 நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் சென்றுள்ள நிலையில் அங்கு 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் இந்தியா - வியட்நாம் இடையே எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி, நேரடி விமானச் சேவை உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும்.
தலைநகர் ஹனோயில் வியட்நாம் அதிபர் துரூங் தன்சாங்கும், பிரணாப் முகர்ஜியும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தென் சீனக் கடற்பகுதியில் நடைபெற்று வரும் எண்ணெய் துரப்பணப் பணியை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அரசியல், ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக, வியட்நாம் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்குவதற்காக 10 கோடி டாலரை இந்தியா கடனாக வழங்குவது என்றும் முடிவானது. இந்தியா - வியட்நாம் இடையே நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரடி விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் விமானச் சேவையைத் தொடங்கவ உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்ட...
-
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையினால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அதிக சேதம் உண்டானது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் ம...
0 comments:
Post a Comment