Wednesday, September 17, 2014
திருப்பூர் : வெயில் அதிகரித்து வருவதால், மின்பயன்பாடும் அதிகரித்துள்ளது. எனவே, மின் சிக்கனத்தை கட்டாயம் பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment