Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், : அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை ஆரம்ப விழா நேற்று நடைபெற்றது.
பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்கத்தினரின் சார்பில், நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கருடகம்பம் முன்புறம் ரிஷப கொடியேற்றி சிவகவி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை கோயில் வளாகத்தில் 108 சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆன்மார்த்த சிவபூஜை செய்தனர். இதில், சிவபுராணம், பஞ்ச புராணம், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை இன்னிசையுடன் பாடி கூட்டு வழிபாடு நடத்தினர். குளித்தலை ராமலிங்கம் திருமுறை இன்னிசையுடன் அவிநாசி ஸ்தலபுராணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், தேனி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, பெங்களூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்க பொறுப்பாளர்கள் திருப்பூர் சிவபாபு, திருவண்ணாமலை சிவகோவர்த் தன், திருச்சி சிவபார்த்தசாரதி மற்றும் அவிநாசி சுந்தரர் வார வழிபாட்டு குழுவினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் வார திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை சொற்பொழிவு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment