Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், : அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை ஆரம்ப விழா நேற்று நடைபெற்றது.
பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்கத்தினரின் சார்பில், நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கருடகம்பம் முன்புறம் ரிஷப கொடியேற்றி சிவகவி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை கோயில் வளாகத்தில் 108 சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆன்மார்த்த சிவபூஜை செய்தனர். இதில், சிவபுராணம், பஞ்ச புராணம், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை இன்னிசையுடன் பாடி கூட்டு வழிபாடு நடத்தினர். குளித்தலை ராமலிங்கம் திருமுறை இன்னிசையுடன் அவிநாசி ஸ்தலபுராணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், தேனி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, பெங்களூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்க பொறுப்பாளர்கள் திருப்பூர் சிவபாபு, திருவண்ணாமலை சிவகோவர்த் தன், திருச்சி சிவபார்த்தசாரதி மற்றும் அவிநாசி சுந்தரர் வார வழிபாட்டு குழுவினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் வார திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை சொற்பொழிவு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment