Tuesday, September 09, 2014
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து, இஸ்லாமிய தேசம் என்று
அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது
என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல இடங்களை பிடித்து வைத்துள்ளனர்.
அந்த இடங்களை மீட்பதற்காக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள்
பிடியிலிருந்த அமெரிக்க செய்தியாளர் ஒருவரை ஏற்கனவே தலையை துண்டித்து கொலை
செய்தனர்.
தற்போது மேலும் ஒரு அமெரிக்க செய்தியாளரை தலையை துண்டித்து கொலை
செய்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பினார்கள். இது
அமெரிக்காவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருப்பதாவது:–
அமெரிக்க செய்தியாளரின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டதன் மூலம்
தீவிரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது.
அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த மோசமான செயலை நாங்கள்
ஒருபோதும் மறக்கமாட்டோம். இதற்கு நிச்சயமாக உரிய பதிலடி கொடுக்கப்படும்.
தீவிரவாதிகளின் செயலை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை. இஸ்லாமிய தேசம்
என்று அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி
பூண்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அவர்களை
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற உறுதி இப்போது மீண்டும் எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.
துணிச்சல் மிகுந்த அந்த இரு செய்தியாளர்களின் குடும்பத்துக்காக நாம் இறைவனை
பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment