Tuesday, September 09, 2014
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டு இரண்டு பெரிய விமான விபத்துக்களை
சந்தித்தது. இவ்விபத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை பெரும் சரிவை
நோக்கிச் சென்றது
இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய யுக்திகளைக் கையாண்டது
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம். கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. மேலும்
பல சிறப்புச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
ஆஸ்திரேலிய நிறுவன விற்பனையைப் புதுப்பித்து அந்நாட்டு முகவர்களுக்கு
கமிஷன் தொகையை தாராளமாகத் தந்தது. மேலும் அந்நாட்டுப் பயணிகளுக்குச்
சலுகையாக 'மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' என்ற தலைப்பில் புதுவிதமான போட்டி
ஒன்றை அரங்கேற்றியது.
இதில் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடம் மற்றும் அதற்கான
காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐபேட்
அல்லது விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனம் தெரிவித்தது. இதில் பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் இறப்புக்கு
முன் பார்க்க அல்லது செய்ய விரும்பும் செயல்களைப் பிரதிபளிப்பதாகும்.
இரண்டு விபத்தை சந்தித்த இந்நிறுவனம் இதுபோன்று போட்டியின் தலைப்பை
வைத்தது பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. பின் இந்நிறுவன
இணையத்திலிருந்து அப்பெயர் நீக்கப்பட்டு பயணிகள் செய்ய விரும்பும் செயல் என
மாற்றி அமைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment