Saturday, September 13, 2014
பெண் தலைமைக் காவலரை காணவில்லை என அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து
வருபவர் மனோஜ்குமார் (40). இவர், பாலிபேக் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி மணிமாலா (37). இவர், திருப்பூர் மாநகரக் காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் மேகா (11), மகன் சந்தோஷ்குமார் (9) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த மணிமாலா, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்ற மணிமாலா, அதன்பின் வீடு திரும்பவில்லை.
கணவர் மனோஜ்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விசாரிததபோது, அன்றைய தினம் மணிமாலா பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜ்குமார் திருப்பூர், வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment