Saturday, September 13, 2014
பெண் தலைமைக் காவலரை காணவில்லை என அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து
வருபவர் மனோஜ்குமார் (40). இவர், பாலிபேக் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி மணிமாலா (37). இவர், திருப்பூர் மாநகரக் காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் மேகா (11), மகன் சந்தோஷ்குமார் (9) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த மணிமாலா, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்ற மணிமாலா, அதன்பின் வீடு திரும்பவில்லை.
கணவர் மனோஜ்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விசாரிததபோது, அன்றைய தினம் மணிமாலா பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜ்குமார் திருப்பூர், வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment