Saturday, September 13, 2014
மலாலாவை துப்பாக்கியால் சுட்ட நபர்களை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வந்த குழந்தைப் போராளி
மலாலா யூசுபாய், கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால்
சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த அவர், லண்டனில் தீவிர சிகிச்சைக்குப்
பிறகு உயிர் பிழைத்தார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர், அங்கிருந்தபடி பிரச்சாரத்தை
தொடர்கிறார். அவருக்கு கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மதிப்பு மிக்க மனித உரிமை
விருது வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பெயர் பரிந்துரை
செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் ராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வு
அமைப்புகள் இணைந்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலை
தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக,
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 10 பேரும் மலாலா மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று ராணுவ
மேஜர் ஜெனரல் ஆசிம் பஜ்வா இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
தலிபான் இயக்கத்தின் தற்போதைய தலைவர் மவுலானா பஜ்லுல்லாவின் உத்தரவுப்படி
மலாலாவை கொலை செய்ய இந்த குழுவினர் திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment