Saturday, September 13, 2014
மலாலாவை துப்பாக்கியால் சுட்ட நபர்களை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வந்த குழந்தைப் போராளி
மலாலா யூசுபாய், கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால்
சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த அவர், லண்டனில் தீவிர சிகிச்சைக்குப்
பிறகு உயிர் பிழைத்தார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர், அங்கிருந்தபடி பிரச்சாரத்தை
தொடர்கிறார். அவருக்கு கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மதிப்பு மிக்க மனித உரிமை
விருது வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பெயர் பரிந்துரை
செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் ராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வு
அமைப்புகள் இணைந்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலை
தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக,
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 10 பேரும் மலாலா மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று ராணுவ
மேஜர் ஜெனரல் ஆசிம் பஜ்வா இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
தலிபான் இயக்கத்தின் தற்போதைய தலைவர் மவுலானா பஜ்லுல்லாவின் உத்தரவுப்படி
மலாலாவை கொலை செய்ய இந்த குழுவினர் திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment