Thursday, September 11, 2014
சாலை விபத்தில் பெண் மரணமடைந்த நிலையில், அப்பெண்ணின் உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது ம னைவி அங்கம்மாள் (43). இவர், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் கிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார்த்திக்ராஜா (23) என்பவர், ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கார்த்திக் ராஜாவை பிடித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போதையில் இருந்த கார்த்திக் ராஜா உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அங்கம்மாளின் சடலம், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் உடுமலை டிஎஸ்பி (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கம்மாள் உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த அங்கம்மாளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கார்த்திக் ராஜாவை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment