Tuesday, September 02, 2014
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தனி வட்டாட்சியர் நகர நிலவரித் திட்டம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 வார்டுகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு தற்காலிக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 30 வார்டுகளில் இரண்டு மாதத்திற்கு இரண்டு வார்டுகள் வீதம் அனைத்து குடியிருப்புகளுக்கும் இது சம்பந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரத்திற்கு உட்பட்ட 2வது வார்டு, சித்தராவுத்தன்பாளையம், காட்டூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
தற்போது அறிவிப்புகள் வெளியான போதும், போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று நகர நிலவரித் திட்ட அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment