Tuesday, September 02, 2014
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தனி வட்டாட்சியர் நகர நிலவரித் திட்டம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 வார்டுகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு தற்காலிக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 30 வார்டுகளில் இரண்டு மாதத்திற்கு இரண்டு வார்டுகள் வீதம் அனைத்து குடியிருப்புகளுக்கும் இது சம்பந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரத்திற்கு உட்பட்ட 2வது வார்டு, சித்தராவுத்தன்பாளையம், காட்டூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
தற்போது அறிவிப்புகள் வெளியான போதும், போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று நகர நிலவரித் திட்ட அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
Kathir Avan with ராதா கிருஷ்ணன் முகநூல் செய்தி. ஒரு ரூபாயில் ஒரு உயிர்….. இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்க...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
இந்தோனேஷியா அரசால் தூக்கிலிடப்பட்ட மயூரன் சுகுமாரன் இரத்தம் வடியும் இந்தோனேஷிய கொடியை தனது இறுதி ஓவியமாக வரைந்துள்ளார். போதைப்பொருட்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...

0 comments:
Post a Comment