Monday, September 15, 2014
பல்லடம் : பல்லடத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் திருப்பூர் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பல்லடம் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் சார்பில், விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டி நேற்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியை, எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 கி.மீ., போட்டியிலும்; 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 6 கி.மீ., ஓபன் பிரிவு மற்றும் 8 கி.மீ., போட்டியிலும்; 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கி.மீ., பிரிவிலும்; பெண்கள் 4 கி.மீ., பிரிவிலும் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவில் கோவை சேர்ந்த அம்பிகா முதலிடம் பெற்றார். கோவை கிருஷ்ணவேணி இரண்டாமிடம், திருப்பூரை சேர்ந்த சினேகா மூன்றாமிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடம் பெற்றார். திருப்பூரை சேர்ந்த மயில்சாமி இரண்டாமிடம், திருப்பூர் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். 10 முதல் 12ம் வகுப்பு மாணவியர் பிரிவு தொடர் ஓட்டத்தில், பல்லடத்தை சேர்ந்த கோகிலதேவி முதலிடம், திருப்பூர் சவுந்தர்யா இரண்டாமிடம், கோவை சிவசில்வா மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் பிரிவில், கோவை சக்திவேல் முதலிடம், கோவை பாலன் இரண்டாமிடம், திருப்பூர் ஆனந்தராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
பொதுப்பிரிவு பெண்கள் போட்டியில், திருப்பூர் பிரேமா முதலிடம் பெற்றார். கோவை விஜயாபாண்டி இரண்டாமிடம், பல்லடம் லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த மயில்சாமிக்கு முதலிடம் கிடைத்தது. கோவை ராமச்சந்திரன் இரண்டாமிடம், திருப்பூர் பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பல்லடம் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் சார்பில், விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டி நேற்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியை, எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 கி.மீ., போட்டியிலும்; 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 6 கி.மீ., ஓபன் பிரிவு மற்றும் 8 கி.மீ., போட்டியிலும்; 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கி.மீ., பிரிவிலும்; பெண்கள் 4 கி.மீ., பிரிவிலும் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவில் கோவை சேர்ந்த அம்பிகா முதலிடம் பெற்றார். கோவை கிருஷ்ணவேணி இரண்டாமிடம், திருப்பூரை சேர்ந்த சினேகா மூன்றாமிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடம் பெற்றார். திருப்பூரை சேர்ந்த மயில்சாமி இரண்டாமிடம், திருப்பூர் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். 10 முதல் 12ம் வகுப்பு மாணவியர் பிரிவு தொடர் ஓட்டத்தில், பல்லடத்தை சேர்ந்த கோகிலதேவி முதலிடம், திருப்பூர் சவுந்தர்யா இரண்டாமிடம், கோவை சிவசில்வா மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் பிரிவில், கோவை சக்திவேல் முதலிடம், கோவை பாலன் இரண்டாமிடம், திருப்பூர் ஆனந்தராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
பொதுப்பிரிவு பெண்கள் போட்டியில், திருப்பூர் பிரேமா முதலிடம் பெற்றார். கோவை விஜயாபாண்டி இரண்டாமிடம், பல்லடம் லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த மயில்சாமிக்கு முதலிடம் கிடைத்தது. கோவை ராமச்சந்திரன் இரண்டாமிடம், திருப்பூர் பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment