Monday, September 15, 2014
அவிநாசி : அவிநாசி அருகே, மந்தகதியில் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணியை, விரைவாக முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதூர் - மங்கலம் ரோட்டில், பாலமுருகன் கோவில் அருகில் பள்ளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் ரோடு மேடாக்கப்பட்டு, அதன் கீழ் மழை நீர் வடிகால் குழாய் பதிக்கப்பட்டது. அதன் மறுமுனையில், மழை நீர் வெளியேறும் வகையில், ஆறு அடி ஆழத்தில் வடிகால் கட்டப்பட்டது. அதன் முடிவில், காசிகவுண்டன்புதூரில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் இணைக்காமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயில், கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், "நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால் கட்டி, மூன்று மாதமாகிறது. நீர் வெளியேறும் பாதை (டிஸ்போசபிள் பாயின்ட்) அமைக்காததால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. விரைவாக பணியை முடித்து, கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "மழைநீர் வடிகால் வெளியேறும் வகையில், மங்கலம் ரோட்டில் அமைக்கப்பட்ட கால்வாயின் மறுமுனையை, சாக்கடை கால்வாயுடன் இணைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் அப்படியே நிற்கின்றன. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். காசிகவுண்டன்புதூர் வழியாக குழாய்களை பதித்து, கழிவுநீரை வெளியேற்றும் வகையில், பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்,' என்றார்.
வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதூர் - மங்கலம் ரோட்டில், பாலமுருகன் கோவில் அருகில் பள்ளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் ரோடு மேடாக்கப்பட்டு, அதன் கீழ் மழை நீர் வடிகால் குழாய் பதிக்கப்பட்டது. அதன் மறுமுனையில், மழை நீர் வெளியேறும் வகையில், ஆறு அடி ஆழத்தில் வடிகால் கட்டப்பட்டது. அதன் முடிவில், காசிகவுண்டன்புதூரில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் இணைக்காமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயில், கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், "நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால் கட்டி, மூன்று மாதமாகிறது. நீர் வெளியேறும் பாதை (டிஸ்போசபிள் பாயின்ட்) அமைக்காததால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. விரைவாக பணியை முடித்து, கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், "மழைநீர் வடிகால் வெளியேறும் வகையில், மங்கலம் ரோட்டில் அமைக்கப்பட்ட கால்வாயின் மறுமுனையை, சாக்கடை கால்வாயுடன் இணைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் அப்படியே நிற்கின்றன. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். காசிகவுண்டன்புதூர் வழியாக குழாய்களை பதித்து, கழிவுநீரை வெளியேற்றும் வகையில், பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்,' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment