Wednesday, September 03, 2014
குழித்துறை அருகே நூதன முறையில் கடத்திய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யது அலி, டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நேற்று காலை மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த லோடு ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே, அதிகாரிகள் லோடு ஆட்டோவை துரத்தி சென்று, குழித்துறை அருகே கல்லுக்கெட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, அதில் மிட்டாய் பொருட்கள் இருப்பதாக கூறினார்.
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் மிட்டாய் பொருட் களுடன் போதை புகையிலை பொருட்கள், பாக்கு பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப் படுகிறது.
இவை நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளையில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறினார்.
கேரளாவில் இத்தகைய புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய போதை பொருட்களை களியக்கா விளையில் பதுக்கி வைத்து விட்டு அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல, எடுத்து வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், நூதன முறையில் கடத்திய போதை புகையிலை பொருட்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், லோடு ஆட்டோ டிரைவர் நாகர்கோவில், கோட்டாறு பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
குமரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யது அலி, டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் நேற்று காலை மார்த்தாண்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த லோடு ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே, அதிகாரிகள் லோடு ஆட்டோவை துரத்தி சென்று, குழித்துறை அருகே கல்லுக்கெட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, அதில் மிட்டாய் பொருட்கள் இருப்பதாக கூறினார்.
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது, அதில் மிட்டாய் பொருட் களுடன் போதை புகையிலை பொருட்கள், பாக்கு பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப் படுகிறது.
இவை நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளையில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறினார்.
கேரளாவில் இத்தகைய புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய போதை பொருட்களை களியக்கா விளையில் பதுக்கி வைத்து விட்டு அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல, எடுத்து வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், நூதன முறையில் கடத்திய போதை புகையிலை பொருட்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், லோடு ஆட்டோ டிரைவர் நாகர்கோவில், கோட்டாறு பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment