Tuesday, September 02, 2014
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18.9.2014 அன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட்டு தேர்தலைச் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.9.2014 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு ஆகியவற்றுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 22வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 45வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திருமுருகன் பூண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலிலும், திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டு (குண்டடம்) தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதெனவும், உடுமலை ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு, கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் மற்றும் தளி பேரூராட்சி 5வது வார்டு, பல்லடம் நகராட்சி 6வது வார்டு ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இடைதேர்தல் நடைபெறும் மற்ற பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் கூடிப்பேசி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.
(M.ரவி) (K.காமராஜ்)
மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர்
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment