Saturday, September 13, 2014
வடவள்ளி, செப்.13–
கோவை செல்வபுரத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் சாலையில் புட்டுவிக்கி பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் நொய்யலாற்றின் இடையே தரைப்பாலமாக இருந்து வந்தது. இப்பாலத்தை டவுன்ஹால், உக்கடம் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன் படுத்தி வந்தனர்.
இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கோவைப் புதூர், சுண்டக்காமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் சுற்றுப்பாதை வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகரை அடைந்து வந்தனர். இதற்கு தீர்வு கோரி அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து ரூ.15 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 70 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட பெரிய மேல்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
சிமெண்டு கான் கிரீட்டிலான 5 தூண்களுடன் பிரமாண்டமாக பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உக்கடத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் வரையிலான இணைப்பு சாலையை 7 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி கூறும்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னர் பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment