Monday, September 01, 2014
திருப்பூரில் அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், "டிவைடர்' இல்லாத பகுதிகளில், ரோட்டை இரண்டாக பிரிக்கும் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதில், ஒரு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும்; மறுபுறம், வாகனங்கள் எதிரில் வரவேண்டும். பிரதான ரோடுகளில், சில இடங்களில் வெள்ளைக்கோடு தேய்ந்து, அழிந்துள்ளது; சில இடங்களில், ரோட்டுக்கு நடுவே வெள்ளைக்கோடு வரைந்த அறிகுறியே காணப்படவில்லை. ரோட்டை பிரிக்காத இப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள், முறையான போக்குவரத்தை பின்பற்றுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும் நோக்கத்துடன், ரோட்டின் மறுபுறம் வரை வேகமாக செல்கின்றன. வரிசையாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையே கார்களும், டூவீலர்களும் புகுந்து செல்வது, வழக்கமாக உள்ளது.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment