Monday, September 01, 2014
தெற்கு ரெயில்வே கால அட்டவணை கடந்த 28–ந் தேதி வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிரீமியம் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில ரெயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் பயண நேரம் குறைகிறது. புதிய கால அட்டவணை இன்று (1–ந் தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது.
கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12676) நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் இரவு 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இன்று முதல் கோவை எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
சென்ட்ரலில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 8.15 மணிக்கு புறப்படும். 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9 மணிக்கு புறப்பட்டு செல்லும். 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
இதே போல சென்ட்ரலில் இருந்து பழனிக்கு இரவு 9 மணிக்கு புறப்படக்கூடிய எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் புறப்பாடு நேரம் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து (12651) செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இன்று முதல் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 11.25 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment