Monday, September 01, 2014
தெற்கு ரெயில்வே கால அட்டவணை கடந்த 28–ந் தேதி வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிரீமியம் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில ரெயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் பயண நேரம் குறைகிறது. புதிய கால அட்டவணை இன்று (1–ந் தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது.
கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12676) நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் இரவு 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இன்று முதல் கோவை எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
சென்ட்ரலில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 8.15 மணிக்கு புறப்படும். 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9 மணிக்கு புறப்பட்டு செல்லும். 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
இதே போல சென்ட்ரலில் இருந்து பழனிக்கு இரவு 9 மணிக்கு புறப்படக்கூடிய எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் புறப்பாடு நேரம் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து (12651) செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இன்று முதல் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 11.25 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மிலாடி ...

0 comments:
Post a Comment