Sunday, September 14, 2014
கோவை மாவட்ட அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1994–ம் ஆண்டு நல வாரியம் அமைத்து தொழிலாளர்களுக்கு தனி அந்தஸ்து வழங்கியும்,தொழிலாளர்களின் நலன் கருதி 0.3 சதவீதமாக இருந்த நல வாரிய நிதியை ஒரு சதவீதமாகவும்,மத்திய திட்டத்திலும் ஒரு சதவீத வரியை பிடித்தம் செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தொழிலாளர் நலன் காக்க ஓய்வூதியமாக ரூ.ஆயிரம் ஆகவும், கட்டிட விபத்து, மரண நிதி ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தியுள்ளார். தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு மறுபதிவு என்பதை 5 ஆண்டுகளாக உயர்த்தியும், கட்டுமான தொழிலாளர்கள் நலன் காக்க நடமாடும் மருத்துவமனை, அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார்.எனவே நாளை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணியினர் திரண்டு முதல்–அமைச்சரை வரவேற்க வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment