Thursday, September 18, 2014
ஆலந்தூர்,
சென்னை தரமணி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அழகு உத்தரவின் பேரில், தரமணி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போலீஸ்காரர் ஷிபு, இளைஞர் காவல் படை காவலர் விஷ்ணு ஆகியோர் தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல்அலீம் (வயது 39) என்பது தெரியவந்தது.
அவரது ஆட்டோவில் 2 அரிவாள் மற்றும் 3 கத்திகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் விசாரித்த போது ஆட்டோவில் தனது நண்பர்கள் உதவியுடன் ஒருவரை கொலை செய்ய வந்ததாக கூறினார். இதையடுத்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அப்துல்அலீமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment