Wednesday, September 17, 2014
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா(வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். கீர்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று குடும்பத்தினருடன் மீண்டும் பெங்களூர் திரும்பினார். கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அஜித்(வயது 26) என்பவர் பயணம் செய்தார். இவர் ராணுவத்தில் சமையல்காரராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ரெயில் சேலம் அருகே வந்த போது, அஜித் பக்கத்து சீட்டில் இருந்த மாணவி கீர்த்திகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் கீர்த்திகா இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியை சில்மிஷம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ராணுவ வீரருக்கு கடந்த 8–ந் தேதி தான் திருமணம் நடந்தது. ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புதுமாப்பிள்ளையான ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
உடுமலையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார்டு வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். உடுமலை போடிபட...

0 comments:
Post a Comment