Wednesday, September 17, 2014
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா(வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். கீர்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று குடும்பத்தினருடன் மீண்டும் பெங்களூர் திரும்பினார். கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அஜித்(வயது 26) என்பவர் பயணம் செய்தார். இவர் ராணுவத்தில் சமையல்காரராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ரெயில் சேலம் அருகே வந்த போது, அஜித் பக்கத்து சீட்டில் இருந்த மாணவி கீர்த்திகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் கீர்த்திகா இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியை சில்மிஷம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ராணுவ வீரருக்கு கடந்த 8–ந் தேதி தான் திருமணம் நடந்தது. ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புதுமாப்பிள்ளையான ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment